Saturday 27th of April 2024 05:11:30 PM GMT

LANGUAGE - TAMIL
.
வடக்கில் தொற்றுறுதியான 21 பேரின் விபரங்கள் வெளியாகின!

வடக்கில் தொற்றுறுதியான 21 பேரின் விபரங்கள் வெளியாகின!


யாழ். ஆய்வு கூடங்களில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த 21 பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

யாழ். பல்கலைக் கழக மருத்துவபீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகிய ஆய்வுகூடங்களில் இன்றைய தினம் (ஏப்-21) 788 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு வடக்கு மாகாணத்தில் 21 பேர் உட்பட 38 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டம் - 15

யாழ். சுகாதார அதிகாரி பிரிவு - 11 பேர் (யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்)

யாழ். போதனா வைத்தியசாலையில் - 02 பேர் (தனிமைப்படுத்தல் விடுதியில் உள்ளவர்கள்)

நல்லூர் சுகாதார அதிகாரி பிரிவு - 01 (சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்)

கோப்பாய் சுகாதார அதிகாரி பிரிவு - 01 (சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்)

மன்னார் மாவட்டம் - 05 (மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்)

இவ் ஐவரில் நால்வர் கொரோனாத் தொற்று அறிகுறுகளுடன் வெளிநோயாளர் பிரிவுக்கு சென்றவர்கள். மற்றையவர் மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தவராவர்.

முல்லைத்தீவு மாவட்டம் - 01 (மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு கொரோனா தொற்று அறிகுறியுடன் சென்றிருந்த இராணுவத்தை சேர்ந்தவர்)

இவ்வாறு வட மாகாணத்தில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கோப்பாய், மன்னார், முல்லைத்தீவு, நல்லூர், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE